சரஸ்வதி மத்திய கல்லூரி
1932ம் ஆண்டு 50 மாணவர்களைக் கொண்டு பசுபதி வித்தியாலயம் என்ற பெயரில் திரு.கா.இராஜலிங்கம்(நாவலப்பிட்டிய தேர்தல்தொகுதி பாரளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வித்தியாலயம் திரு.ர.Pபி.பானபொக்க என்பவரால் பதிவு செய்யப்பட்டது. வித்தியாலய திறப்பு விழாவிற்கு இந்திய அரசாங்க அதிகாரி திரு.மேனன் அவர்களும்இ திருமதி. சரஸ்வதி மேனன் அவர்களும் சமூகமளித்து சிறப்பித்தனர். அன்றிலிருந்து திரு.மேனனின் ஞாபகார்த்தமாக அவரது மனைவியின் பெயரான சரஸ்வதி என்ற பெயர் இவ்வித்தியாலயத்திற்கு சூட்டப்பட்டது.
தொடர்ந்து 1940ம் ஆண்டுகளில் 122 மாணவர்களோடு சிறப்பாக இயங்கி வந்தது. தொடர்ந்து 1950ம் ஆண்டு திரு.எஸ்.தொண்டமான் அவர்களால் தற்போது கல்லூரி அமைந்திருக்கும் காணி பெற்றுக்கொடுக்கப்பட்டது. 1960ம் ஆண்டு 360 மாணவர்களையும்இ 14 ஆசிரியர்களையும் கொண்டு வித்தியாலயம் வளர்ச்சி பாதையில் காலடி வைத்தது. 1970 மாணவர் தொகை 850 ஆக உயர்ந்ததோடு ஆசிரிய தொகை 27 ஆக உயர்வடைந்தது. 1985ம் ஆண்டு முதன்முறையாக இரு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு அதன்பின்னர் பல்கலைகழகப்பிரதேசத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டது. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த்தினப்போட்டியில் தங்கப்பதக்கங்களையும்இ இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பல வெற்றிகளையும் பெற்றுள்ளது. க.பொ.த சாதாரணதரஇ உயர்தர பரீட்சை சிறந்த பெறுபேறு பெற்றுக்கொள்ளப்பட்டது.
2000ம் வருட காலப்பகுதியில் கேட்போர் கூடம்இ கணினிப்பிரிவுஇ நூல் நிலையம் என்பன அமைக்கப்பட்டன. 2007ம் ஆண்டு இப்பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையின் வளர்ச்சி சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட்டதோடு காலப்போக்கில் அப்பிரிவு ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்டுள்ள நிலையில் தற்போதைய அதிபரின் தலைமையின் கீழ் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கான ஆசிரியர்களை பெற்று தற்போது அப்பிரிவும் சிறப்பான கற்றல் கற்பித்தல் செயற்பாடு நடைபெறுகின்றது. எமது பாடசாலையில் கற்கும் மாணவர்கள் அணைவரும் பெருந்தோட்ட துறையை சார்ந்த மாணவர்கள் என்பதால் 2017ம் ஆண்டில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 95மில்லியன் ரூபா நிதியுதவியுடன் பாடசாலையின் உயர்தர விஞ்ஞானப்பிரிவை அபிவிருத்தி செய்வதற்காக ஆய்வுக்கூடங்களுடன்ப கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு தற்போது கையளிக்கப்பள்ளது.